"சூரல் பம்பிய சிறுகான் யாறு "என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள யாப்புச் சான்று நூலின் வெளியீட்டு விழா திருப்பூர் மாநகரில் நடைபெற உள்ளது. அழைப்பிதழைப் பார்க்க இப்பக்கத்திலேயே உள்ள சுட்டியைச் சொடுக்கவும். மரபுச் செய்யுளின் மீது பள்ளி நாட்களிலிருந்தே இருக்கும் பேரர்வத்தின் காரணமாக இந்நூலினை இயற்றியுள்ளேன். வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நூலுக்கு தமிழின் தலை சிறந்த எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் அவர்கள் வழங்கிய அணிந்துரையைநான் பெற்ற பேறாகக் கருதுகிறேன்!

